இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு க...
இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கமைய கொழும் மாவட்டத்தில் 17 இலட்சத்து 9, 209 வாக்காளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்களும் ,
களுத்துறை மாவட்டத்தில் 9 இலட்சத்து 72 ஆயிரத்து 319 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் 11 இலட்சத்து 29 ஆயிரத்து 100 வாக்காளர்களும்,
மாத்தளை மாவட்டத்தில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 569 வாக்காளர்களும்,
நுவரெலியா மாவட்டத்தில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 717 வாக்காளர்களும்,
காலி மாவட்டத்தில் 8 இலட்சத்து 67 ஆயிரத்து 709 வாக்காளர்களும்,
மாத்தறை மாவட்டத்தில் 6 இலட்சத்து 59 ஆயிரத்து 587 வாக்காளர்களும்,
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 192 வாக்காளர்களும்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதே போன்று வன்னி மாவட்டத்தில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 024 வாக்காளர்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 வாக்காளர்களும் ,
திகாமடுல்லை மாவட்டத்தில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 வாக்காளர்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 வாக்காளர்களும்,
குருணாகலை மாவட்டத்தில் 13 இலட்சத்து 48 ஆயிரத்து 787 வாக்காளர்களும்,
புத்தளம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 14 ஆயிரத்து 370 வாக்காளர்களும்,
அநுராதபுரம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 93 ஆயிரத்து 634 வாக்காளர்களும்,
பொலன்னறுவை மாவட்டத்தில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 109 வாக்காளர்களும்,
பதுளை மாவட்டத்தில் 6 இலட்சத்து 68 ஆயிரத்து 166 வாக்காளர்களும்,
மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்காளர்களும்,
இரத்தினபுரி மாவட்டத்தில் 8 இலட்சத்து 77 ஆயிரத்து 582 வாக்காளர்களும்,
கேகாலை மாவட்டத்தில் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 189 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்