முள்ளிவாய்க்கால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பதவிப்பிரமாணம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் சனிக்கிழமை மு.ப 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இம்முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.