தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்று, ஆவா குழுவின் மிரட்டலால் நிறுத்தப்பட்டதாக அண்மையில்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்று, ஆவா குழுவின் மிரட்டலால் நிறுத்தப்பட்டதாக அண்மையில் வெளியான செய்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உருவாக்கப்பட்ட போலி செய்தியென்பது உறுதியாகியுள்ளது.
3 நாட்களின் முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட ருவிற்றர் பதிவு ஒன்றில், தமது கூட்டம் ஆவா குழு மற்றும் இராணுவ புலனாய்வாளர்களால் குழப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கதிரைகளை அடித்து உடைத்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னணிளின் ரவிற்றர் செய்தியின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தது.
அன்றைய தினம் இளைஞர்களினால் முன்னணியின் கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதும், சில கதிரைகள் அடித்து உடைக்கப்பட்டதும் உண்மை. எனினும், அது ஆவா குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் அண்மையில் உருவாகியுள்ள பிளவுடன் தொடர்புடையது. கட்சிக்குள் புதிய சக்தியாக உருவாகிவரும் மணிவண்ணனை ஓரம்கட்டியே கட்சியின் செயற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னணியின் கூட்டங்களிற்கு மணிவண்ணனிற்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.
அன்றைய தினம் இணுவில், சுதுமலையில் இரண்டு மக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரண்டு சந்திப்புக்களும் குழப்பத்தில் முடிந்தன. இரண்டு சந்திப்பிற்கும் வந்த இளைஞர்கள், ஏன் மணிவண்ணணை நீங்கள் இப்பொழுது அழைத்து வருவதில்லையென கேள்வியெழுப்பினர். இதற்கு, முன்னணிக்குள் இருக்கும் சிலர் வழக்கம் போல- ஒற்றையாட்சியில் தொடங்கி ஒரு தேசம் இரு நாடு, பூகோள அரசியல் என நீட்டி முழக்கிக் கொண்டு போக, மணிவண்ணன் அழைக்கபடாததற்கும் பூகோள அரசியலுக்கும் என்ன தொடர்பு என இளைஞர்கள் எகிற, அங்கு களேபரமாகியுள்ளது.
இந்த மோதலிலேயே கதிரைகள் சில உடைக்கப்பட்டன.
60 ஆண்டு தமிழ் தேசிய அரசியலில், எதிர்ப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் இலகுவாக துரோகி என முத்திரை குத்துவதுதான் வழக்கம். இம்முறை முன்னணி கொஞ்சம் வித்தியாசமாக அவர்களை ஆவா குழு என அறிவித்ததே நடந்தது.