தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையை கஜேந்திரகுமார் அணி ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக மணிவண...
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையை கஜேந்திரகுமார் அணி ஆரம்பித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக மணிவண்ணன் தரப்பிலுள்ள உள்ளூராட்சி நியமன பட்டியல் உறுப்பினர்களை பதவிவிலகும்படி கஜேந்திரகுமார் அணி கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னணியிலுள்ள மணிவண்ணன் ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையை கஜேந்திரகுமார் அணி ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக, உள்ளூராட்சி நியமன பட்டியலில் நியமிக்கப்பட்டவர்களை பதவிவிலக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நியமன பட்டியல் உறுப்பினர்களில்- மணிவண்ணன் ஆதரவாளர்களை மட்டும் உடனடியாக பதவிவிலகும்படி முன்னணி தலைமை அறிவித்துள்ளது.
யாழ் மாநகரசபையிலுள்ள இரண்டு பெண் உறுப்பினர்கள், சாவகச்சேரி நகரசபையிலுள்ள மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களிற்கு அறிவித்துள்ளது.
முன்னணியின் நியமன பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டபோது, ஒரு வருடத்தில் மாற்றம் செய்வதென குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இரண்டு வருடங்களாக அதில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது, மேற்கொள்ளப்படும் பதவி மாற்றம் மணிவண்ணன் ஆதரவாளர்களிடம் மட்டுமே நடக்கிறது.