முள்ளிவாய்க்கால், பதவிப்பிரமாணம், சரத் வீரசேகர, யாழ் எக்ஸ்பிரஸ்
இறுதிப்போர் முடிந்த முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அட்மிரல் சரத் வீரசேகர இந்தக் கோரிக்கையை இன்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது முன்வைத்தார்.
கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“அண்மையில் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெறும்முன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக நின்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார்.
விக்னேஸ்வரன் ஆற்றிய உரையை ஹான்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.