யாழ்ப்பாணம், யாழ் எக்ஸ்பிரஸ்,
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனிதாபிமான செயற்பாடுகளை தொடர்ச்சியாக வடபகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
மேலும், யாழ் மாவட்டத்தில் வீடற்றவர்களுக்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள குடியிருப்புத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.