நல்லூர் கந்தசுவாமியின் தீர்த்த திருவிழாவான இன்று தங்கச் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ...
நல்லூர் கந்தசுவாமியின் தீர்த்த திருவிழாவான இன்று தங்கச் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது.
உற்சவத்தில் நல்லூர் கந்தன் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடி கொண்டிருந்த போது அங்கிருந்த பக்தர்களிடம் தங்கச் சங்கிலி அறுக்க முட்பட்னர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.