கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் அனைத்து கல்வி நடவடிக்கைளும் நாளை முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் அனைத்து கல்வி நடவடிக்கைளும் நாளை முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை முழுமையாக மீள திறப்பதற்கான நடவடிக்கைகளை இரண்டு கட்டமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இதன் முதலாம் கட்டமாக, கடந்த 02 ஆம் திகதி முதல் 6ஆம் வகுப்பு தொடக்கம் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் மீளவும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
இதன்படி, ஆரம்ப வகுப்புகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை தவிர்த்து வருவதாகவும், இது கொரோனா தொற்று பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.