யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவிருந்த இரத்ததான முகாம் பொலிஸாரின் தலையீட்டினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவிருந்த இரத்ததான முகாம் பொலிஸாரின் தலையீட்டினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு ஆரம்பத்தில் யாழ் போதானா வைத்தியசாலை இரத்த வங்கியினரும் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் நேற்று
காலை பொலிஸார் குறித்த இரத்ததான முகாமினை நடாத்த வேண்டாம் என யாழ் போதானா வைத்தியசாலையிடம் கோரியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இரத்ததான முகாமினை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடாத்துவதில் இருந்து பின்னடித்துள்ளனர் என நம்பகரமாக அறியமுடிகிறது.
இவ் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை தொடர்புகொண்ட போது, இன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றுகூடல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் தவிர்க்க முடியாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் இரத்ததானம் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.