தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் ...
தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது.
சாவகச்சேரி சிவன் கோவில் அருகே உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சி பாணியில் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை ஒடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு மத்தியில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மாவை சேனாதிராசா,சி.சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், பா.கஜதீபன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மணிவண்ணன், சுகாஸ், உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.