இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காலி,களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபு...
இதன்படி காலி,களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தற்போதைய சீரற்ற காலநிலை உள்ளதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 12 மணிநேரங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.