தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புதிய தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மத்திய குழுவால் ஏகமனதாக தெரிவு செய...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புதிய தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மத்திய குழுவால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
அதேவேளை முன்னணியின் உப செயலாளராக திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சிறிஞானகுகனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் மணிவண்ணன் நீக்கப்பட்டதையடுத்து இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.