எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செ...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ரத்மலானையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி இவ்வாறு கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தான் எந்த வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் எனவும், எவருக்கும் அச்சமடையப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.