தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவ...
தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட தபால் அதிபர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
குறித்த சந்திப்பு நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தபால் அதிபர்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆளனி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படாமை, தபால் நிலைய கட்டிடங்கள் இல்லாமை, வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.