நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த இலங்கைப் பிரஜையை கைது செய்ய இந்திய பொலிஸார், சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள...
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த இலங்கைப் பிரஜையை கைது செய்ய இந்திய பொலிஸார், சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை நடிகர் விஜய் சேதுபதி நன்றி!வணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக இலங்கைப் பிரஜை ஒருவர் தனது டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார்.
இதற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்ததாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் (சர்வதேச பொலிஸார்) உதவியை நாட தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.