இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 14வது மரணச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கு...
தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி குளியாபிட்டி வைத்தியசாலையிலிருந்து தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்தநபர், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த பெண் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர் எனவும், குறித்த நோய்கள் காரணமான சிக்கல் தன்மையினால் அவர் மரணமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.