தலையில் குளவி கொட்டியதில் மயக்கமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் கொக்குவில் மேற்குப் பகுதியை சேர்ந்த பரமானந்தம...
தலையில் குளவி கொட்டியதில் மயக்கமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் கொக்குவில் மேற்குப் பகுதியை சேர்ந்த பரமானந்தம் பொன்னம்பலம் என்ற 78 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொக்குவில் பகுதியில் வசித்து வரும் குறித்த குடும்பஸ்தர் வரணியில் உள்ள அவரது ஆலயத்திற்கு கடந்த 17 ஆம் திகதி சென்றுள்ளார்.அங்கு ஆலயத்தின் பாத்திரங்களை துப்பரவு செய்துள்ளார்.
இதன் போது எதிர்பாராதவிதமாக குளவிக் கூடு கலைந்துள்ளது.இதனால் குளவிகள் கூட்டமாக அவரது தலையில் கொட்டியுள்ளது.இதனால் மயக்கம் அடைந்த அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.