ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை விரைந்த இரகசிய பொலிஸார் மேற்படி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இரண்டாவது நாளாக நேற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தேடி 6 பொலிஸ் குழுக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.இருந்த போதிலும் அவரை கைது செய்ய முடியவில்லை.