"எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட...
"எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தினால் குறித்த விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு தென்மராட்சி சாவகச்சேரியில் ஆரம்பமான விழிப்புணர்வு செயல்திட்டத்தின் போது இலவச முகக்கவசங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.