தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உருவாகுவதை சில கட்சிகளின் தனிநபர்கள் சிலர் விரும்பவில்லை என ஈபிஆர்எல்எவ் தலைவரும் தமிழ் மக்கள்...
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உருவாகுவதை சில கட்சிகளின் தனிநபர்கள் சிலர் விரும்பவில்லை என ஈபிஆர்எல்எவ் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முக்கியஸ்தருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
புதிய கூட்டணி உருவாக்குவதற்கான திட்டவரைபுகளை சமர்பித்திருக்கின்றோம். கடந்தகாலங்களில் உருவாக்கிய கூட்டணிகளுக்கு நிகழ்ந்த கடந்தகாலத் தவறுகள் புதிய கூட்டணிக்குள்ளும் நிகழாத வகையில் அதனை அமைப்பதற்கு கூடுதல் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
ஊடகங்களிலும் வெளியிடங்களிலும் ஐக்கியம் பற்றிப் பேசிக்கொள்கின்ற சில கட்சிகளின் சில நபர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக புதிய கூட்டணி உருவாகுவதை விரும்பவில்லை. இந்த விடயம் தொடர்பில் நேற்றுமுன்தினம் கூட்டுக்கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் பேசியுள்ளோம்.
அவ்வாறான சிக்கல்களைக் களைந்து புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.