யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ யாழில் அமைக்கப்படவுள்ள வீதி புனரமைப்பு த...
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ யாழில் அமைக்கப்படவுள்ள வீதி புனரமைப்பு தொடர்பில்அதிகாரிகளை கேள்விகளால் குடைந்தெடுத்தார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்திற்கமைய ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் நான்கு வீதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வீதிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் கடற்கரை வீதி தொடர்பில் அதிகாரிகளை அமைச்சர் கேள்விகளால் குடைந்தெடுத்தார்
1.6கிலோ.மீற்றர் தூரம் உடைய யாழ்ப்பாணம் கடற்கரை வீதி சுமார் 488 .4 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்க மதிப்பீடு செய்யப்பட்டது. ஏனைய மூன்று வீதிகளுடன் ஒப்பிடுகையில் குறித்த வீதிப் புனரமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டதுடன் இனிவரும் கலங்களில் அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போதுஅரசாங்கத்தின் நிதி விடயங்களை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அமைச்சர்அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.