கஜேந்திரர்களின் கதையைக் கேட்டு மணிவண்ணனை கூட்டத்திற்கு அழைக்காத மாவை தற்போது அம்மணமாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நிலைப்பாட்டில் ...
கஜேந்திரர்களின் கதையைக் கேட்டு மணிவண்ணனை கூட்டத்திற்கு அழைக்காத மாவை தற்போது அம்மணமாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடல் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணனை கலந்துரையாடலுக்கு அழைத்தால் குறித்த கலந்துரையாடலில் தமது அணி பங்குபற்றாது என கஜேந்திரர்கள் தரப்பால் மாவை சேனாதிராஜாவிற்கு அழத்தம் விடுக்கப்பட்ட அறியக் கிடைத்துள்ளது.
நான்கு தடவைகளுக்கு மேல் கூடிய தமிழ் கட்சிகளின் சந்திப்பில் கஜேந்திரர்கள் எவரும் ஒரு தடவையேனும் பங்கு கொள்ளாத நிலையில் மாவை தரப்பு ஏமாற்றமடைந்துள்ளது.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் காரசாரமாக பேசப்பட்டது. இரண்டு கிழமைக்குள் கயேந்திரர்களின் முடிவை அறியும்படியும் சேர்ந்து பயணிக்க முடியாது என்றால் அவர்களை கழற்றி விடுமாறு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முணுமுணுத்தனர்.
எனவே மாவை நம்பிக்கை வைத்த கயேந்திரர்கள், மாவையை ஏமாற்றிய நிலையில் மணிவண்ணனை தமிழ் கட்சிகளின் சந்திப்பில் மாவை அழைப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.