கொரோனா பரவல் அபாயம் உள்ள மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் முடக்க பகுதிகள் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் திட்டமிட்டபடி 23ம் திகதி பாட...
கொரோனா பரவல் அபாயம் உள்ள மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் முடக்க பகுதிகள் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் திட்டமிட்டபடி 23ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகுமென கல்வியமைச்சு கூறியுள்ளது.
இன்றைய தினம் இந்த அறிவிப்பை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மட்டுமே 23ம் திகதி பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளது.
ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை ஆரம்பமாகும் திகதிகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.