யாழ்ப்பாணம் நாவாந்துறை (ஜே/86) கிராமசேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து இப்பகுதி மக...
யாழ்ப்பாணம் நாவாந்துறை (ஜே/86) கிராமசேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உதவி வழங்க வந்தவருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரிவு கிராம சேவையாளர் அவரது உதவியாளர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான PCR பரிசோதனை நாளைய தினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.