திருவெம்பாவை விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ் பல்கலைக்கழகத்திலும் இம்முறை திருவெம்பாவை ஓதுதல் நிகழ்வு நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழகத்தில்...
திருவெம்பாவை விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ் பல்கலைக்கழகத்திலும் இம்முறை திருவெம்பாவை ஓதுதல் நிகழ்வு நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் அனுமதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திருவெம்பாவை ஓதுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தற்போதைய கொரோனா சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த திருவெம்பாவை ஓதலானது யாழ் பல்கலை பரமேஸ்வராஆலயமுன்றலில் ஆரம்பமாகி கலட்டி சந்தியினூடாக பாலசிங்கம் ஆண்கள் விடுதியை அடைந்து, தபால்பெட்டி சந்தியினூடாக பரமேஸ்வாரா சந்தியை அடைந்து பின் மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
மாணவர்கள் இவ்விடயம் தொடர்பாக கூறுகையில் திருவெம்பாவை ஓதலென்பது தமிழர் பண்பாட்டில் குறிப்பாக சைவ மக்களிடையே இருந்து வந்த ஒரு பண்பாட்டு அம்சமாகும். கடந்த காலங்களில் கிராமங்கள் தோறும் இவ் திருவெம்பாவை ஓதல் இடம்பெற்றது ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் நாகரிக மோகத்தில் அழிந்துவருகின்ற சந்தர்பத்தில் இவ் ஆன்மீக எழுச்சியானது எதிர்வரும் காலங்களில் இவ்செயற்பாட்டிற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்பது மாணவர்களின் கருத்தாக அமைந்தது.