இலங்கையின் நிலப்பரப்புக்குள் நகரும் புறேவி சூறாவளியின் பாதையில் மாற்றம் ஏற்படுவது போல், செய்மதி தொழிநுட்பத்தின் தரவுகளுக்கு அமைய புலப்படுகின...
இலங்கையின் நிலப்பரப்புக்குள் நகரும் புறேவி சூறாவளியின் பாதையில் மாற்றம் ஏற்படுவது போல், செய்மதி தொழிநுட்பத்தின் தரவுகளுக்கு அமைய புலப்படுகின்றது.
இந்த தரவிலே வவுனியாவில் இருந்து, கிளிநொச்சி ஊடாக சாவகச்சேரி மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்கு ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் டோண்டி ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பாதையில் பயணிப்பது போல் அமைந்துள்ளது.
எனினும், வானிலை அவதான நிலையத்தினால் இது தொடர்பில் எந்த வித தகவலும் விடுக்கபடவில்லை. இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய தகவல்கள் தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.