கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய...
முதலாவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று (10) இரவு முல்லேரியா ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.
எனினும் அந்த வைத்தியசாலை உடலை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக மீண்டும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கே கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.