யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருடாந்த குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண...
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருடாந்த குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் குருதி முகாமில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடையினை வழங்கியிருந்தார்கள்.
இக் குருதிக்கொடை முகாமில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த பிரிவை சேர்ந்த வைத்தியர்
திருமதி சாந்தகுமார் சம்பிகா, இரத்த வங்கி உத்தியோகத்தர் த. ரவினதாஸ், தாதியாளர் செல்வி சமனலி மற்றும் சுகாதார உதவியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.