உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமலாகியிருந்த முடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது! என...
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமலாகியிருந்த முடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது! என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பர்,
மருதனார்மடம் சந்தை அதனைச்சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது. மற்றும் தெல்லிப்பளை மற்றும் உடுவில்க் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.