காரைநகர் பெரிய அடைப்பு நாச்சிமார் குளத்து நீர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இரு தரப்பினரிடையே வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டது. இச்சம்பவம...
காரைநகர் பெரிய அடைப்பு நாச்சிமார் குளத்து நீர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இரு தரப்பினரிடையே வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பகுதியில் அமைந்துள்ள குளமானது சுமார் 200க்கு மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நடவடிக்கைக்கு தேவையான நீரை வழங்குவதோடு நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக குறித்த குளம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த குளத்தினர் கடந்த வார இறுதியில் கன மழை பெய்யாதா போதும் குறித்த குளத்தின் நீர் அதிகளவு கடலுக்கு சென்றமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில் குளத்து நீர் அதிகளவு வெளியேறியமை வருத்தம் அளிப்பதாகவும் குளத்தின் கதவு பொருத்தும் பகுதியில் ஏற்பட்ட சிறு கசிவே குளத்து நீர் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது குளத்தின் கதவு பகுதியில் நீர்க்கசிவு ஏற்படாவண்ணம் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளதோடு குளம் தொடர்பிலும் விவசாயிகள் தொடர்பிலும் அவதானத்துடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.