போத்தலில் அடைக்கப்பட்ட தென்னை மற்றும் பனங் கள்ளுக்கான வரி, உடன் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி போத்தல்களுக்கு விதிக்கப்பட்டி...
போத்தலில் அடைக்கப்பட்ட தென்னை மற்றும் பனங் கள்ளுக்கான வரி, உடன் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 50 ரூபாவிலிருந்து 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.
தென்னை மற்றும் பனை என்பவற்றினால் தயாரிக்கப்படும் கள் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை குறைக்குமாறு, நாடாளுமன்ற குழுக்களின் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் யாழ் வந்திருந்த விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிடம் குறித்த விடயங்கள் தொடர்பில் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இந்த நிலையிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிவுறுத்துலுக்கு அமைய, தென்னை மற்றும் பனை என்பவற்றினால் தயாரிக்கப்படும் கள் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கள் தவறணைகளின் விற்பனை நேரத்தை மேலும் இரண்டு மணித்தியாலங்ளினால் நீடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கள் தவறணைகளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரையும், பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையும் திறந்துவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய திருத்தங்ளின் பிரகாரம், தனிநபர் ஒருவரினால் விற்பனை செய்ய முடியுமான கள்ளின் அளவு, 1.5 லீற்றரிலிருந்து மூன்று லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.