பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் பதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனில...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் பதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட கைப்பிடி மண்ணை, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பயன்படுத்த
மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி மண்ணை நோக்கி பேரணி முன்னேறிச் செல்கிறது.
வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.