தமிழினத்திற்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நாளை மறுதினம்17ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் ஆரம்பமாகும் மக்...
தமிழினத்திற்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நாளை மறுதினம்17ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் ஆரம்பமாகும் மக்கள் எழுச்சிப் பேரணி அனைவரும் அணி திரளுமாறு யாழ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூரில் நேற்றைய தினமும் 15 நாளாக இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதி வேண்டி வடக்கு கிழக்கு எங்கும் சுழற்சி முறையிலான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை அரசு இறுதிப் போரில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளுக்கு சர்வதேசத்தின் மூலமே தீர்வினைப் பெற முடியும் என தமிழர்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் அதற்கான அழுத்தங்களை ஐநா உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்.
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் மக்கள் எழுச்சிப் பேரணி உண்ணாவிரதப் பந்தலை வந்தடைவதோடு தூதரகங்களுக்கு அனுப்புவதற்கான கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளது.
ஆகவே காலத்தின் தேவை கருதி குறித்த போராட்டம் வெற்றி அளிப்பதற்கு பாடசாலை மாணவர்கள் சிவில் அமைப்புகள் அரசியல்வாதிகள் சமயத் தலைவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலர் பங்கெடுத்து குறித்த போராட்டத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.