கொவிட்-19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எடுத்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக தமிழ் தேசியக் க...
கொவிட்-19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எடுத்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் விரைவில் ஒன்றுக்கூடி மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.