வத்தளை − ஹுனுபிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே...
வத்தளை − ஹுனுபிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசமிருந்து 2.433 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
27 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியில் கடந்த 10ம் திகதி நடத்திய சோதனையில் 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 101 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்
குறித்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளின் ஊடாக ஜாஎல பகுதியிலிருந்து 15 KG ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து 100 KG ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 128 KG ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.