காஸாவிலுள்ள அல்-ஜஸீரா மற்றும் ஏபீ செய்தி நிறுவனங்களின் கட்டிடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் அமைந்திருந்த கட்...
காஸாவிலுள்ள அல்-ஜஸீரா மற்றும் ஏபீ செய்தி நிறுவனங்களின் கட்டிடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிறுவனங்கள் அமைந்திருந்த கட்டிடங்கள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிறுவனங்கள் அமைந்திருந்த 11 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் குடியிருப்புக்கள் மற்றும் பல நிறுவனங்கள் இருந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கட்டிடத்திற்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 140திற்கும் அதிகமான பாலஸ்தீன பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.