யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ள...
யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அச்சுவேலியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த 36 வயதுடைய நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா எனும் ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுதே குறித்த நபர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அவரது சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ளது.