நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண...
நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு யாழ்.பொலிஸ் பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளில் சுற்றுக்காவல் நடவடிக்கையினை பொலிஸார் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் இரவு வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை சோதனையிட்டதுடன்
பயணிக்கும் வாகனங்களையும் சோதனை இடம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய சேவை தவிர்ந்து
தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்ட்டனர். அண்மைய நாட்களில்
யாழ்ப்பாண குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள், தேவாலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.