இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தக...
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் ட்ரூ சிலோனுக்கு உறுதிப்படுத்தினர்.
எனினும், மேலதிக தகவல்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் குறப்பிடுகின்றனர்.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், விசாரணைகளுக்காக தமது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.