கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளான். கடந்த 1...
கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளான்.
கடந்த 10 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வீட்டில் தங்கியிருந்த மாணவன் 14 ஆம் திகதி கலுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வைத்தியசாலையில் நோய் தீவிரம் காரணமாக அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாணவன் நேற்று (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த சஷ்மித என்ற குறித்த மாணவனுக்கு தம்பி ஒருவரும் தங்கை ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.