இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, நேற்றைய தின...
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 186 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,790ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பு நேற்றைய தினமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.