மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்...
மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
கரடியனாறு பகுதியில் பயணித்த உழவு இயந்திரத்தை நிறுத்;துமாறு பொலிஸார் ஆணையை பிறப்பித்த போதிலும், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி இந்த உழவு இயந்திரம் பயணித்துள்ளது.
இதையடுத்தே, துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.