பொழுதுபோக்காளர்களின் சொர்க்கமாக கருதப்படும் ´சருங்கல் கந்த´ என்று அழைக்கப்படும் பதுளை ரீதிபான குன்றின் உச்சியில் இருந்து மனித எச்சங்கள் சில ...
பொழுதுபோக்காளர்களின் சொர்க்கமாக கருதப்படும் ´சருங்கல் கந்த´ என்று அழைக்கப்படும் பதுளை ரீதிபான குன்றின் உச்சியில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குன்றுக்கு சென்ற சிறுவர்கள் சிலர் குறித்த மனித எச்சங்களை கண்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நேற்றைய தினம் (26) பதுளை பொலிஸிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மண்டை ஓடு ஒன்றையும் சில மனித எலும்புத் துண்டுகளையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.