தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமிக்ஞை பிரிவின் தலைவர் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமிக்ஞை பிரிவின் தலைவர் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுவாஞ்சிக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமிக்ஞை பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
34 வயதான குறித்த நபர் கைக்குண்டொன்றை வைத்திருந்ததன் நோக்கம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.