ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அவர் உரை நிகழ்த்தப்படவுள்ள...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அவர் உரை நிகழ்த்தப்படவுள்ள காலம்/நேரம் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட் சூழலில் மகாநாயக்கர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தரப்பினரும் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த உரையில் முக்கிய விடயங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.