பயணக்கட்டுப்பாடு விதித்திருக்கும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சுற்றுல...
பயணக்கட்டுப்பாடு விதித்திருக்கும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதை தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்துக்கொள்வது தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இராஜதந்திர மட்டத்தில் இதுதொடர்பான கலந்துரையாடல்களை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.