கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் அடக்கம் செய்வதற்காக இலங்கையில் காட் போர்ட் சவப்பெட்டிகளும் பயன்படுத...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் அடக்கம் செய்வதற்காக இலங்கையில் காட் போர்ட் சவப்பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த காட் போர்ட் சவப்பெட்டிகள் தொடர்பான தகவல்கள் அண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இதன் விலை குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது.
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் சென்றதன் காரணமாக, தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினரான பியந்த சஹபந்துவின் ஆலோசனையின் பேரில் இந்த கடினக் காகித சவப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் அதிபகட்ச விலை 2000 ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.