யாழ் அச்சுவேலி பகுதியில் தனது வீட்டினுள் மிகவும் கூரிய திறனான முறையில் வடிவமைக்கப்பட்ட வாள்களை உடமையில் வைத்திருந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு ...
யாழ் அச்சுவேலி பகுதியில் தனது வீட்டினுள் மிகவும் கூரிய திறனான முறையில் வடிவமைக்கப்பட்ட வாள்களை உடமையில் வைத்திருந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
குறித்த நபர் தனது உடமையில் வாள்களை வைத்திருப்பதுமன்றி அக்கிராமத்தில் பல வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்திருந்தார். அண்மையிலும் வாள்களை கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டி கலவரத்தில் ஈடுபட்டுவந்திருந்தார். குறித்த நபர் வாள்களை வைத்து மிரட்டல்கள், வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கெரோயின் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில் யாழ மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வீடு நேற்றையதினம் பொலிஸாரால் சற்றி வளைக்கப்பட்டு தேடுதல் இடப்பட்டிருந்தது.
இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கூரிய வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.அத்துடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் பின் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த கைது நடவடிக்கை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றிருந்தது.