ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி...
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
நல்லூர் ஆலய பின் வீதியில் அமைத்துள்ள நினைவிடத்தில் இன்று மாலை 06 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.