கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை (Sanitizer) அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 கைதிகள் சிறைச்...
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை (Sanitizer) அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளே தொற்று நீக்கி திரவத்தை அருந்தியதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக நேற்று (13) வருகை தந்த ஈரான் தூதரக அதிகாரிகள், தொற்று நீக்கி திரவத்தை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.